பறவைகள், விலங்குகள்போல் சத்தமிட்டு கொள்ளையடிக்கும் "குருவி" என்ற பிரபல கொள்ளைக்காரன் கைது..!

ஆசிரியர் - Editor I
பறவைகள், விலங்குகள்போல் சத்தமிட்டு கொள்ளையடிக்கும்

பறவைகள், மிருகங்கள்போல் சத்தமிட்டு கொள்ளையடித்துவந்த "குருவி" என அழைக்கப்ப டும் பிரபல கொள்ளைக்காரனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சாய்ந்தமருது பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி நகை திருட்டு தொடர்பான முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றது.

இதனடிப்படையில் முறைப்பாடு சம்பந்தமாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் வை அருணன் சார்ஜன்ட் 

ஏ.எல்.எம் றவூப் (63188) கான்ஸ்டபிள் கீர்த்தனன்(6873) ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.குறித்த முறைப்பாட்டிற்கமைய செயற்பட்ட பொலிஸார் 

திருட்டு சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு அருகாமையில் உள்ள சிசிடிவி காணொளியை பெற்று குறித்த காணொளியை ஆதாரமாக கொண்டு 

சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரால் களவாடப்பட்ட நகைகள் 

இவரது சகாவான மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பகுதியை சேர்ந்த நபரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் , அந்த நகைகளை குறித்த நபர் பொத்துவில், 

பட்டிருப்பு, பாண்டிருப்பு பகுதியில் உள்ள நகை கடைகளில் அடகு வைத்திருந்த நிலையில் அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவலுக்கு அமைய 6 பவுண் பெறுமதியான 

நகைகளை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குருவி என்ற பிரபல திருடன் ஏற்கனவே 3 மோட்டார் சைக்கிள் திருட்டிற்காக 3 முறை 

தலா 6 மாத சிறை தண்டனை பெற்றிருந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு