வெள்ளத்தில் மூழ்கிய பாடசாலைகள்..! படகுகள், வாகனங்களில் ஏற்றி பாடசாலைக்கு மாணவர்களை கொண்டுசென்ற இராணுவம்..

ஆசிரியர் - Editor I
வெள்ளத்தில் மூழ்கிய பாடசாலைகள்..! படகுகள், வாகனங்களில் ஏற்றி பாடசாலைக்கு மாணவர்களை கொண்டுசென்ற இராணுவம்..

தொடரும் கனமழையினால் கிளிநொச்சி மாவட்டத்தில், கண்டாவளை, தருமபுரம், உருத்தி ரபுரம், ஆனந்தபுரம், சிவபுரம், பன்னங்கண்டி பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.

வெள்ளத்தால் பாடசாலைகளும் நீரில் மூழ்கியுள்ளன. தர்மபுரம் மகாவித்தியாலயம், கிளிநொச்சி இந்துக்கல்லூரி என்பனவற்றிற்குள்ளும் நீர் புகுந்தது.

கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை நடந்து கொண்டிருக்கும் நிலையில், வெள்ளம் சூழ்ந்த பாடசாலைக்கு செல்வதில் மாணவர்கள் சிரமங்களை சந்தித்தனர். 

இதையடுத்து, அந்த பகுதிகளில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் மாணவர்களிற்கு உதவினர்.படகு, இராணுவ ட்ரக்டர்களில் மாணவர்களை 

ஏற்றி பரீட்சை மண்டபங்களிற்கு அழைத்துச் சென்றனர்.அத்துடன், நீரில் மூழ்கிய பரீட்சை மண்டபங்களை மாடி வகுப்பறைகளிற்கு மாற்றும் பணியிலும் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு