வெள்ள காடானது கிழக்கு..! மக்கள் தொடர்ந்து இடம்பெயரும் நிலை..

ஆசிரியர் - Editor I
வெள்ள காடானது கிழக்கு..! மக்கள் தொடர்ந்து இடம்பெயரும் நிலை..

அம்பாறை மாவட்டத்தில் தொடரும் கனமழையினால் நாவிதன்வெளி கல்முனை மற்றும் கல்லோயா குடியேற்றத்திட்டம் இடையில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் போக்குவரத் து முற்றாக பாதிக்கப்பட்டிருக்கின்றது.

தினமும் விவசாயிகள், அலுவலக உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஆயிரக் கணக்கானவர்கள் நாளாந்தம் பயணிக்கும் குறித்த வீதியில் வெள்ளம் பாய்ந்து வருவதால் கல்லோயா குடியேற்றக் கிராமங்களிலுள்ள 

சவளக்கடை அன்னமலை, சொறிக் கல்முனை, 4ஆம், 5ஆம், 6ஆம், 12ஆம் கொளனிகள், நாவிதன்வெளி போன்ற பிரதேச மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாகப் பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கையை இதுவரைக்கும் எந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக 04 ஆயிரத்து 342 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 68 வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 

அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தெரிவித்தார்.கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 449 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 449 நபர்களும், காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 181 நபர்களும், 

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 05 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேரும் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும், அவர் தெரிவித்தார்.அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, 

பொத்துவில், திருக்கோவில், லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில். நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நட்பிட்டிமுனை, நாவிதன்வெளி, 

மருதமுனை ஆகிய தாழ்ந்த பிரதேசங்களிலுள்ள மக்களின் குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு