கடுமையான கடல் கொந்தளிப்பு..! நெடுந்தீவுக்கான பரீட்சை வினாதாள்கள் உலங்குவானூர்தியில் சென்றது..

ஆசிரியர் - Editor I
கடுமையான கடல் கொந்தளிப்பு..! நெடுந்தீவுக்கான பரீட்சை வினாதாள்கள் உலங்குவானூர்தியில் சென்றது..

யாழ்.தீவுப்பகுதி கடல் மிக கொந்தளிப்பாக காணப்பட்டமையால் நெடுந்தீவில் கா.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாள்கள் விமானப்படை உலங்குவானூர்தி ஊடாக எடுத்து செல்லப்பட்டிருக்கின்றது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் கடந்த 2ஆம் திகதி தொடக்கம் வரும் 12ஆம் திகதிவரை இடம்பெறுகிறது. இதில் நெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் படகுமூலம் அனுப்பிவைக்கப்பட்டு வந்தன. 

எனினும் இன்று கடல் கொந்தளிப்பு நிலை காணப்பட்டதால் உலகுவானூர்தி மூலம் அங்கு வினாத்தாள்கள் அனுப்பிவைக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு