வவுனியா வடக்கில் தொடரும் கனமழை..! எல்லை கிராமங்களில் 33 குடும்பங்கள் இடப்பெயர்வு, முடிந்தால் உதவுங்கள்..

ஆசிரியர் - Editor I
வவுனியா வடக்கில் தொடரும் கனமழை..! எல்லை கிராமங்களில் 33 குடும்பங்கள் இடப்பெயர்வு, முடிந்தால் உதவுங்கள்..

நெடுங்கேணி காஞ்சூரமோட்டை மற்றும் மருதோடை கிராமங்களில் உள்ள 33 குடும்பங்களைச்சேர்ந்த 110 பேர் மருதோடை அ.த.க.பாடசாலை மற்றும் மருதோடை பொதுநோக்கு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இன்னும் அந்த பகுதிகளில் இடம்பெயருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தற்போதுவரை உணவு மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது.

எனவே அவர்களுக்கு சில அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படுகின்றன.

1.நுளம்பு வலை

2. குழந்தைப்பிள்ளைகளுக்கான பால்மா

3.பாய்

4.பனடோல்

உதவி செய்ய விரும்பும் நண்பர்கள் முன்வரவும்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு