காங்கேசன்துறை கடலில் குளிக்க சென்ற இளைஞன் கடலில் மாயம்..! கடற்படையினர் தேடுதல்..

ஆசிரியர் - Editor I
காங்கேசன்துறை கடலில் குளிக்க சென்ற இளைஞன் கடலில் மாயம்..! கடற்படையினர் தேடுதல்..

காங்கேசன்துறை கடலில் குளிக்க சென்ற தென்னிலங்கை இளைஞன் ஒருவன் கடலில் மூழ்கி காணாமல்போயுள்ளார். இந்நிலையில் காணாமல்போன இளைஞனை மீட்பத ற்காக கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர்.

சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது என்று கடற்படையினர் தெரிவித்தனர். மாத்தறையைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இளைஞனுடன் வந்தவர்கள் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை வழங்கியுள்ளனர்.

கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டார் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு