ஜனாதிபதி கோட்டாவை கொலை செய்ய சதி..! சூடு பிடிக்கும் விசாரணைகள். முஸ்லிம் இளைஞன் குற்ற புலனாய்வு பிரிவிடம்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி கோட்டாவை கொலை செய்ய சதி..! சூடு பிடிக்கும் விசாரணைகள். முஸ்லிம் இளைஞன் குற்ற புலனாய்வு பிரிவிடம்..

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் இளைஞன் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை அல்லது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரை கொலை செய்வதன் ஊடாக பாரிய பணத் தொகையைப் பெறலாம் எனவும் வெளிநாட்டில் சென்று வாழக் கூடிய சூழலும் கிடைக்கும் எனவும் கூறி 

சிலருடன் இணைந்து கொலை சதித் திட்டம் தீட்டியதாக தெரிவித்து ஐந்து இளைஞர்களையே கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்தனர்.அதில் நான்குபேரை விசாரணைகளின் பின் விடுவித்துள்ளதோடு , 

பிரதான சந்தேக நபரான வாழைச்சேனையை சேர்ந்த நபரிடன் பொலிஸார் 72 மணி நேர விசாரணைகளை மேற்கொண்டு வந்துனர்.இந்நிலையில் குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு