விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு..! யாழ்.வட்டுக்கோட்டையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு..! யாழ்.வட்டுக்கோட்டையில் சம்பவம்..

யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்த உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 

இந்த சம்பவத்தில் குகதீசன் நருஜன் (வயது-5) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.தாயும் தந்தையும் வெளியில் சென்றநேரம் குறித்த சிறுவன் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

வீட்டுக்கு வந்த தாயும் தந்தையும் மகனைக் காணாது தேடியபோது குறித்த சிறுவன் கிணற்றில் மிதப்பதை அவதானித்துள்ளனர்.இதனையடுத்து அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் 

சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு