வடமாகாண ஆளுநராக மூத்த ஊடகவியலாளர் ந.வித்தியாதரன்..! கூட்டமைப்புக்கு நல்லெண்ணத்தை காட்டும் ஜனாதிபதி, பிரதமர்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநராக மூத்த ஊடகவியலாளர் ந.வித்தியாதரன்..! கூட்டமைப்புக்கு நல்லெண்ணத்தை காட்டும் ஜனாதிபதி, பிரதமர்..

தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்காக வடமாகா ண ஆளுநராக சிரேஷ்ட பத்திரிகையாளர் ந.வித்தியாதரனை நியமிக்க ஜனாதிபதி கோட்ட பாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இணங்கியுள்ளனர்.

எனவே புதிய அரசு, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் சமிக்ஞையாக வடக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை பயன்படுத்தவேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை 

ஜனாதிபதி கவனத்தில் எடுத்துள்ளார் என்று அவரது தரப்புக்கள் தெரிவித்தன.வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபயவால் பல்வேறு மட்டங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் 

ஒவ்வொருவரும் தமக்கு சார்பானவர்களை முன்மொழிந்திருந்தனர். இதனடிப்படையில் கடந்த 19ஆம் திகதி தன்னை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கத் 

தகுதியானவரை பரிந்துரைக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டிருந்தார். அதன்போது தங்களுக்கும் (ராஜபக்சக்கள்) எங்களுக்கும் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) ஒத்துழைத்துச் செல்லக் கூடியவராக மூத்த பத்திரிகையாளர் வித்தியாதரன் உள்ளார். 

அவரை நியமிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரை வழங்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்.எனினும் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை 

வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கவேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உறுதியாக இருந்ததால் அதில் தலையீடு செய்ய பிரதமர் மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என்று அவரது தரப்புக்கள் தெரிவித்திருந்தன.

எனினும் வடக்கு மாகாண ஆளுநர் பதவியை முத்தையா முரளிதரன் நிராகரித்திருந்த நிலையில் அவரை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது பிரதமர் மகிந்த ராஜபக்சவின் 

முன்மொழிவை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் கவனத்தில் எடுத்துள்ளார் என்று ஜனாதிபதியின் தரப்புக்கள் தெரிவித்தன. புதிய அரசு, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தும் முகமாக 

மூத்த பத்திரிகையாளர் நடேசபிள்ளை வித்தியாதரனை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு பரிந்துரைத்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு