தனது புகைப்படத்துடன் வாழ்த்துகூறி அமைக்கப்பட்ட பதாகையை கழற்றி எறிய உத்தரவிட்ட ஜனாதிபதி..!

ஆசிரியர் - Editor I
தனது புகைப்படத்துடன் வாழ்த்துகூறி அமைக்கப்பட்ட பதாகையை கழற்றி எறிய உத்தரவிட்ட ஜனாதிபதி..!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு வாழ்த்துகூறி கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பதாகையை உடனடியாக அகற்றுமாறு ஜனாதிபதி உத்தரவிட்ட நிலையில் பதாகை கழற்றி வீசப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கோட்டபாய ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களை கூறி இ ந்த பதாகை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய விஜயத்தை முடித்துக் கொண் டு நாடு திரும்பிய ஜனாதிபதி பதாகையை அவதானித்துள்ளார். 

இதனையடுத்து தனது அதிகாரிகளை அழைத்த ஜனாதிபதி உடனடியாக அந்த பதாகைக ள் அகற்றப்படவேண்டும். என உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நேற்றய தினம் குறித்த பதாகை கழற்றி வீசப்பட்டிருக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு