பொதுமக்களின் நன்மைக்காக சமய வழிபாடுகளின் பின் சம்பிரதாயபூா்வமாக கடலில் கலக்கவிடப்பட்ட நந்திக்கடல்..!

ஆசிரியர் - Editor I

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, நந்திக்கடல் நீர்மட்டம் உயர்வடைந்திருந்தது.

இதனால் (01.12.2019) இன்று, நந்திக்கடலினை அண்டியிருந்த வயல் நிலங்கள் நீரில் மூழ்கியதுடன், வட்டுவாகல் பாலத்திற்கு மேல் நந்திக்கடலின் நீர்மட்டம் உயர்வடைந்திருந்ததால், 

வட்டுவாகல் பாலத்தினால் போக்குவரத்தில் ஈடுபடுபவர்களும் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்திருந்தனர். எனவே நந்திக்கடலுக்கும், 

பெருங்கடலுக்கும் இடையில் காணப்படுகின்ற  மணல் திடலை வெட்டி அகற்றி, நந்திக்கடல் நீரை பெருங்கடலுடன் இணைத்து நந்திக்கடலின் நீர்மட்டத்தை குறைக்குமாறு விவசாயிகளும் வட்டுவாகல் பகுதி மக்களும் உரியவர்களிடம் கோரியிருந்தனர்.

இந் நிலையில் இன்று, கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினுடைய அனுமதியுடன், சம்பிரதாய பூர்வமாக பூசை வழிபாடுகளுடன், நந்திக்கடல் நீர் பெருங்கடலுடன் இணைக்கப்பட்டது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு