இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 25 அடியாக உயர்வு..! மேலும் பல குளங்கள் நாளை வான் பாயலாம்..

ஆசிரியர் - Editor I
இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 25 அடியாக உயர்வு..! மேலும் பல குளங்கள் நாளை வான் பாயலாம்..

கிளிநொச்சி மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துவரும் நிலையி ல் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் சில குளங்கள் வான் மட்டத்தை அடைந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது. 

வடக்கு மாகாணத்தின் மிகப்பெரிய நீர்பாசன குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் இதுவரைவரை 25 அடியாக உயர்ந்துள்ளது. 36 அடியான குறித்த குளத்திற்கான நீர் வருகை அதிகரித்து காணப்படுவதாக பொறியியலாளர் தெரிவிக்கின்றார். 

இதேவேளை அக்கராயன் குளத்தின் நீர்மட்டம் 16 அடியாவும், கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர்மட்டம் 6.5 அடியாகவும், புது முறிப்பு குளத்தின் நீர்மட்டம் 13 அடியாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, குடமுருட்டி குளம் (08அடி), பிரமந்தனாறுகுளம்(12அடி),

வன்னேரிக்குளம் (09.06அடி) ஆகியன தற்போது வான் பாய ஆரம்பித்துள்ளது. கிளிநொச்சி 10.06அடிகொண்ட கனகாம்பிகைக்குளம் 10.1 அடியாகவும், 24 அடிகொண்ட கல்மடுகுளம் 23'2"அடியாகவும் அதிகரித்துள்ளது. 

இரு குளங்களும் இன்று மாலை அல்லது இரவு வான்பாய ஆரம்பிக்கலாம் என நீர்பாசன பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதும் குளங்களிற்கான நீர் வருகை தொடர்ந்தும் காணப்படும் நிலையில் குளங்கள் நிரம்பி வருவதாகவும்,

மழை பெய்யும் சந்தர்ப்பங்கள், நீர் நிலைகளில் நீராட செல்லுதல், சிறார்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம் தெரிவிக்கின்றது. இயலுமானவரை மக்கள் அவதானத்தடன் செயற்படுமாறும், 

மழை காலங்களில் தவிர்க்க வேண்டி விடயங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு