ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம்..! சீனாவுடன் இணங்கினாா் ஜனாதிபதி கோட்டபாய..

ஆசிரியர் - Editor I
ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம்..! சீனாவுடன் இணங்கினாா் ஜனாதிபதி கோட்டபாய..

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடா்பில் சீனா ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடன் நடாத்திய பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் இணக்கம் ஏற்பட்டி ருப்பதாக தொியவந்துள்ளது. 

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான முன்னாள் தூதுவர் வு ஜியாங்காவோ பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இருவருக்கும் இடையிலான சந்திப்பின்போது அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து ஆராயப்பட்டதாகவும்,இரு தரப்பும் இது குறித்து கருத்துபரிமாற்றத்தில் ஈடுபட்ட பின்னர் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்ட கால நட்புறவிற்கு 

பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு இணங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அரசாங்கம் நீண்ட கால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதன் 

அவசியம் குறித்து விருப்பம் வெளியிட்டுள்ளது.இலங்கையுடனான சீனாவின் பொருளாதார ஒத்துழைப்புகளை அதிகாரிப்பது குறித்த சீனாவின் விருப்பத்தை விசேட பிரதிநிதி வெளியிட்டுள்ளார். இரு நாடுகளும் கைச்சாத்திட்ட ஆனால் 

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படாத திட்டங்களிற்கு புத்துயுர் கொடுப்பதற்கும் இரு தரப்பும் இணங்கியுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு