நந்திக்கடல் நீா்மட்டம் உயா்வு..! விவசாய நிலங்களுக்குள் வெள்ளம், வட்டுவாகல் பாலம் ஊடான போக்குவரத்து பாதிப்பு..! (படங்கள், வீடியோ இணைப்பு)

ஆசிரியர் - Editor I

முல்லைத்தீவு மாவட்டத்தில் கனமழையினால் நந்திக்கடல் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதனால் வட்டுவாகல் பாலத்தின் ஊடான போக்குவரத் து வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதுடன், அதனை அண்டியிருக்கும் பகுதிகளில் உள்ள வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 

இதனால் நந்திக்கடலினை அண்டியதாகக் காணப்படும் வயல் நிலங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன. அதேவேளை வட்டுவாகல் பாலத்திற்கு மேல் நந்திக்கடலின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதனால், வட்டுவாகல் பாலத்தினால் போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள் 

பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். நந்திக்கடலுக்கும், பெருங்கடலுக்கும் இடையில் காணப்படுகின்ற மணல் திடலை வெட்டி அகற்றி, நந்திக்கடல் நீரை பெருங்கடலுடன் இணைக்காதுவிடில், வட்டுவாகல் பாலத்தினால் செல்பவர்களின் போக்குவரத்து முற்றாகத் தடைப்படுவதுடன், 

மேலும் பல ஏக்கர் வயல் நிலங்களும் நீரில் மூழ்கும் அபாய நிலை காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு