பொது இடங்களில் குப்பை கொட்டும் குற்றவாளிகள் கவனத்திற்கு..! சீ.சி.ரீ.வி கமரா மூலம் நீங்கள் படம் பிடிக்கப்படுகிறீா்கள்..!

ஆசிரியர் - Editor I
பொது இடங்களில் குப்பை கொட்டும் குற்றவாளிகள் கவனத்திற்கு..! சீ.சி.ரீ.வி கமரா மூலம் நீங்கள் படம் பிடிக்கப்படுகிறீா்கள்..!

யாழ்ப்பாணம் நகா் பகுதிகளிலும், நகரை அண்டிய பகுதிகளிலும் பொது இடங்களில் கழிவுகளை கொட்டும் குற்றவாளிகள் மறைகாணி(சீ.சீ.ரீ.வி கமரா) ஊடாக கண்காணிக்கப்படுவதுடன், புகை ப்படம் எடுக்கப்பட்டு வருகின்றனா். 

இதன்படி யாழ்.பிறவுண் வீதி, நீராவியடி, நரிக்குண்டு குளத்தடியில் முறையற்றவிதத்தில் குப்பைகளை வீசுவோர் - அங்குள்ள மறைகாணி மூலம் படம்பிடிக்கப்பட்டிருக்கின்றது. இதேபோல் பல இடங்களில் குப்பை

கொட்டுவோா் புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளதுடன், அவா்கள் மீத சட்டநடவடிக்கைகளும் எடுக்கப்படவிருப்பதாக யாழ்.மாநகரசபை கூறியுள்ளது. மேலும் இவர்கள் எறியும் பொருட்கள் குழந்தைகளுக்கு கட்டும் பம்பஸ், 

பெண்களது சுகாதார துவாய் (கோட்டெக்ஸ் ) பெரியவர்களது பம்பஸ், மரக்கறி கழிவுகள், காயங்களுக்கு காட்டி பாவித்த துணிகள் ஆகியன இருப்பதாகவும், சில இடங்களில் விலங்கு கழிவுகளும் வீசப்படுவதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு