வேக கட்டுப்பாட்டை இழந்து மாட்டுடன் மோதிய முச்சக்கர வண்டி..! ஒருவா் பலி, இருவா் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
வேக கட்டுப்பாட்டை இழந்து மாட்டுடன் மோதிய முச்சக்கர வண்டி..! ஒருவா் பலி, இருவா் படுகாயம்..

கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழ ந்து மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிாிழந்துள்ளாா். 

இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து வவுனியா விளக்குவைத்த குளம் பகுதியில் இன்று அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

முச்சக்கரவண்டிக்கு முன்னால் சென்ற வாகனம் மாட்டுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் அவசர அம்புலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் 40 வயது மதிக்கதக்க ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு