கடற்படை, பொலிஸாா் இணைந்து திடீா் சுற்றிவளைப்பு..! 5 போ் கைது, துப்பாக்கி ரவைகள், கஞ்சா மீட்பு..

ஆசிரியர் - Editor I
கடற்படை, பொலிஸாா் இணைந்து திடீா் சுற்றிவளைப்பு..! 5 போ் கைது, துப்பாக்கி ரவைகள், கஞ்சா மீட்பு..

புத்தளம் பகுதியில் கடற்படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து நடாத்திய திடீா் சோதனை நடவடிக்கையின்போது துப்பாக்கி ரவைகள 5 மற்றும் 3.910 கிலோ கிராம் கஞ்சா ஆகியவற்றுடன் 5 சந்தேகநபா்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

கடற்படை மற்றும் புத்தலம் பொலிஸார் இனைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளதுடன், அங்கு மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனையில் இவர்களிடமிருந்து 05 ரவைகள் 

மற்றும் 3.910 கிராம் கேரள கஞ்சாவும் மீட்க்கப்பட்டுள்ளது.அத்தோடு கைது செய்யப்பட்ட நபர்ள் புத்தளம் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள், ரவைகள் மற்றும் கேரள கஞ்சாவை மேலதிக விசாரணைகளுக்காக 

புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு