மின்சாரம் தாக்கி 22வயது மாணவன் பலி..! கிளி.உருத்திரபுரம் பகுதியில் துயரம்..

ஆசிரியர் - Editor I
மின்சாரம் தாக்கி 22வயது மாணவன் பலி..! கிளி.உருத்திரபுரம் பகுதியில் துயரம்..

கிளி.உருத்திரபுரம்- சிவநகா் பகுதியில் மின்சாரம் தாக்கி வவுனியா தொழிநுட்ப பீடத்தின் 1ம் வ ருட மாணவன் உயிாிழந்துள்ளான். 

22 வயதான அதே பகுதியை சேர்ந்த குறிதத் இளைஞன் இன்று காலை மின்சாம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சிவநகர் பகுதியில் அமைந்துள்ள தந்தைக்கு சொந்தமான அரிசி ஆலையில் குறி்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

அரசி ஆலையில் உள்ள பகுதி ஒன்றில் வெள்ள நீர் காணப்பட்டுள்ளது. குறித்த வெள்ள நீலை மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்ற முற்பட்டபோது 

மின்சாரம் பாய்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மின் தாக்கத்திற்கு உள்ளான குறித்த இளைஞனை மயக்கமுற்ற நிலையில் 

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றுள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான 

விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். குறித்த இளைஞன் வவுனியா தொழில்நுட்ப கல்லூரியின் முதலாம் வருட மாணவனான விக்னராசா சாரங்கன் 

என தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு