முள்ளியவளையில் கஞ்சாவுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது..!

ஆசிரியர் - Editor I
முள்ளியவளையில் கஞ்சாவுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது..!

முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் 1 கிலோ கஞ்சாவுடன் பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முள்ளியவளை மாஞ்சோலை பகுதியில் கஞ்சா வியாபாரம் இடம் பெற்றுவருவதாக முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.அண்வர்தீன் 

தலைமையிலான குழுவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமையத் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில் இன்று காலை 03ஆம் கட்டைப்பகுதியில் பஸ்ஸில் வந்திறங்கிய ஆழியவளையினை சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் 

ஒருகிலோ கேரள கஞ்சாவினை நான்கு பொதிகளில் வியாபாரத்திற்காகக் கொண்டுவந்தமை பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களைக் கைது செய்ததோடு, கேரளா கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு ஆழியவளையினை சேர்ந்த 28 வயதான பெண் ஒருவரும் 39 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் ஆழியவளையில் இருந்து பஸ்ஸில் கஞ்சா வியாபாரத்திற்காக வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர்களை முள்ளியளை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு