புலிக்கொடிய தேடிய இராணுவம் என்மீது துப்பாக்கி சூடு நடத்துவோம் என மறைமுகமாக எச்சரித்தனர்..!

ஆசிரியர் - Editor I
புலிக்கொடிய தேடிய இராணுவம் என்மீது துப்பாக்கி சூடு நடத்துவோம் என மறைமுகமாக எச்சரித்தனர்..!

மாவீரர் நாளன்று துப்பாக்கி சூடு நடாத்துவோம். என இராணுவம் தன்னை அச்சுறுத்திய தாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் – நல்லூரில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகள் மாவீரர் தினத்தன்று பயன்படுத்தப்பட்டதா என்பதை உன்னிப்பாக படையினர் அவதானித்ததாகவும் அவர் கூறினார்.

நல்லூரில் அமைந்துள்ள தியாகத் தீபம் திலீபனின் நினவுத் தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டபோது சுற்றிலும் இருந்த பாதுகாப்பு படையினர் 

துப்பாக்கிகளைக் காண்பித்து அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்டதாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அங்கு பறக்கவிடப்பட்டிருந்த கொடிகளை 

சோதனையிட்டு, புலிக்கொடிகள் அங்கே இருக்கின்றதா என்பதையும் தீவிரமாக இராணுவத்தினர் தேடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு