யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையம் நெல் களஞ்சியமாக மாற்றப்படாது..! மேலும் தரம் உயா்த்தப்படும்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையம் நெல் களஞ்சியமாக மாற்றப்படாது..! மேலும் தரம் உயா்த்தப்படும்..

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையம் நெல் களஞ்சியமாக மாற்றப்படாது. மேலும் தரம் உயா்த்தப்படும் என கூறியிருக்கும் அமைச்சா் பிரசன்ன ரணதுங்க, 

மத்தள விமான நிலையத்தை மைத்திாி- ரணில் அரசாங்கம் மாற்றியதைபோல் யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தை நாம் மாற்றப்போவதில்லை எனவும் கூறியுள்ளாா். 

கட்டுநாயக்க, யாழ்ப்பாணம், மத்தள மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் தற்போதைய புதிய அரசாங்கத்துக்கு 

இருப்பதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில், 

ஏற்றுமதி தொழிற்துறை, முதலீட்டு அபிவிருத்தி, சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பிரசன்ன ரணதுங்க நேற்று முன்தினம் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் காலை அமைச்சில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் சந்திப்பை நடத்தினார். இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர்

கடந்த அரசைப் போன்று பெறுமதிமிக்க விமான நிலையத்தில் நெல்மூடைகளைக் களஞ்சியப்படுத்த மாட்டோம் என்று கூறினார்.

மாறாக, மட்டக்களப்பு, கட்டுநாயக்க, மக்கள மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதாகவும் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு