பயந்து நடுங்கி விழுந்து படுத்தது இலங்கை..! சுவிஸ் துாதரக பணியாளா் கடத்தல் விவகாரம் இராஜதந்திர அழுத்தம் அதிகாிப்பு..

ஆசிரியர் - Editor I
பயந்து நடுங்கி விழுந்து படுத்தது இலங்கை..! சுவிஸ் துாதரக பணியாளா் கடத்தல் விவகாரம் இராஜதந்திர அழுத்தம் அதிகாிப்பு..

இலங்கைக்கான சுவிஸ் துாதுவராலய பணியாளா் வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்ட சம்பவம் தொடா்பில் உடனடி விசாரணைகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை வெளிவிவ கார அமைச்சு தொிவித்திருக்கின்றது. 

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், விசாரணைகளை மேற்கொள்வதற்கான உடனடி நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளிற்கு ஏற்ப 

சுமூகமான முறையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முழுமையான ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்திற்கான இலங்கை தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ள ஜேர்மனிக்கான இலங்கை தூதுவர் 

கருணாசேன ஹெட்டியாராச்சி விரைவில் சுவிட்சர்லாந்தின் அதிகாரிகளை சந்தித்து விசாரணைகள் குறித்து தெளிவுபடுத்துவார் .இராஜதந்திர உறவுகள் குறித்த வியன்னா பிரகடனத்தின் கீழ் தனக்குள்ள கடப்பாட்டிற்கான அர்ப்பணிப்பை 

இலங்கை மீள வலியுறுத்துகின்றது எனவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு