ஜனாதிபதி கோட்டாவின் இந்திய விஜயத்தை எதிா்த்து போராட்டம்..! வைகோ கைது..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி கோட்டாவின் இந்திய விஜயத்தை எதிா்த்து போராட்டம்..! வைகோ கைது..

இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் இந்திய விஜயத்தை எதிா்த்து போராட்டம் நடா த்திய மறுமலா்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் செயலாளா் வைகோ கைது செய்யப்பட்டிரு க்கின்றாா். 

டில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் இன்று காலை முதல் மறுமலர்த்தி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதனிடையே பொலிஸார் அங்கு விரைந்து இன்று முற்பகலில் வைகோவை கைது செய்து அழைத்துச் சென்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு