பாதுகாப்புக்கள், ஆடம்பரங்கள் இல்லாமல் வெறும் 6 பேருடன் சாதாரண பயணிகளுடன் இந்தியா பயணமானாா் ஜனாதிபதி கோட்டபாய..!

ஆசிரியர் - Editor I
பாதுகாப்புக்கள், ஆடம்பரங்கள் இல்லாமல் வெறும் 6 பேருடன் சாதாரண பயணிகளுடன் இந்தியா பயணமானாா் ஜனாதிபதி கோட்டபாய..!

இந்திய பிரதமா் நரேந்திர மோதியின் அழைப்பிற்கிணங்க இன்று இந்தியாவுக்கு பயணமான ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் ஆடம்பரம் இல்லா மல் சாதாரன பயணிகளுக்கான பகுதி ஊடாக பயணித்துள்ளாா். 

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திக்கவுள்ளதுடன், இந்திய பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ஏனைய இந்திய பிரமுகர்கள் பலரை சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, 

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, திறைசேரி செயலாளர் சஜித் ஆட்டிகல, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார ஆகியோரும் 

ஜனாதிபதியில் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு