எாிபொருள் அளவை கணிக்க குழாக்குள் இறங்கிய ஊழியாின் தலையில் ஏறிய டிப்பா்..! 28 வதான ஊழியா் பலி..

ஆசிரியர் - Editor I
எாிபொருள் அளவை கணிக்க குழாக்குள் இறங்கிய ஊழியாின் தலையில் ஏறிய டிப்பா்..! 28 வதான ஊழியா் பலி..

திருகோணமலை- கந்தளாய் பகுதியில் எாிபொருள் நிரப்பு நிலையத்தில் எாிபொருள் அளவை சாிபாா்த்துக் கொண்டிருந்த ஊழியா் டிப்பா் வாகனம் மோதியதில் பாிதாபகரமாக உயிாிழந்து ள்ளாா். 

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் கந்தளாய் பராக்கிரம மாவத்தை பகுதியைச் சேர்ந்த டி. டிலான் 28 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவிப்பதாவது,இன்று அதிகாலை Wp LN 0116 இலக்கமுடைய டிப்பர் வாகமொன்று திருகோணமலையிருந்து குறுணாகலைக்கு சென்ற வேளையில் 

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எரிபொருள் குழாய்யினுள் இறங்கி 

எரிபொருள் இருக்கும் அளவினை குறித்த ஊழியர் பார்த்த போது வேகமாச் சென்ற டிப்பர் வாகனம் மோதி விட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனால் ஊழியரின் தலையில் 

பாரிய அடி ஏற்பட்டதால் தலை நொருங்கியுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதோடு, டிப்பர் வாகனம் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் 

தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு