வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவம் அடாவடி..!

ஆசிரியர் - Editor I
வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவம் அடாவடி..!

யாழ்.வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முயற்சித்த எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பொதுமக்களை இராணுவம் மற்றும் பொலிஸார் அடாவடியாக தடுத்துள்ளனர். 

இராணுவத்தினால் இடித்து அழிக்கப்பட்டுள்ள எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக இன்று காலை முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்த முயற்சித்தார். 

எனினும் அங்குவந்த இராணுவத்தினர் சிவாஜிலிங்கத்தை அடாவடியாக தடுத்து நிறுத்தியதாக அவர் கூறியுள்ளதுடன், இராணுவத்தின் அடாவடியை மீறி மாவீரர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு