கிளிநொச்சியில் நாய் இறைச்சி வியாபாரமா..? நாய் தலை மீட்பால் பரபரப்பு..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் நாய் இறைச்சி வியாபாரமா..? நாய் தலை மீட்பால் பரபரப்பு..

கிளிநொச்சி- பழைய கச்சேரிக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றின் முன்னால் நாய் ஒன்றின் தலை மற்றும் தோல் ஆகியன மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நாயின் இறைச்சி உரித்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் தலை மற்றும் தோல் ஆகிய நாய்களினா ல் அல்லது காகம் போன்றவற்றால்

எடுத்துவரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனை பொது சுகாதார பரிசோதகர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அவரும் நாய் இறைச்சி எடுக்கப்பட்டு தோல் மற்றும் தலை வீசப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் நாய் இறைச்சி வியாபாரம்

நடக்கிறதா? என சந்தேகம் எழுந்துள்ளதுடன் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு