ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவம் அடாவடி..! மாவீரர் நாள் வளைவு அகற்றப்பட்டது..

ஆசிரியர் - Editor I
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவம் அடாவடி..! மாவீரர் நாள் வளைவு அகற்றப்பட்டது..

முல்லைத்தீவு- துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலிலும் இல்லத்திற்கு அருகில் அமை க்கப்பட்ட மாவீரர் நாள் வளைவு படையினரால் அடாவடிகாக அகற்றப்பட்டிருப்பதுடன், அங் கிருந்த பொதுமக்களின் தொலைபேசிகளும் இராணுவத்தால் பறிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயற்பாட்டை எவரும் ஒளிப்பதிவு செய்வதனைத் தடுக்கும் வகையில் அனைவரது அலைபேசிகளும் கைப்பற்றப்பட்டு மீள வழங்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆலங்குளம் துயிலும் இல்லம் இராணுவத்தினரின் 

கட்டுப்பாட்டுள் உள்ள நிலையில் பிரத்தியேக இடத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் நாளை நவம்பர் 27 மாவீரர் நாள் கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகள் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்துக்கான 

தெரிவு செய்யப்பட்ட இடத்தில் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது மாவீரர் நாள் வளைவு வைக்கப்பட்ட போது, இன்று பிற்பகல் அங்கு வந்த இராணுவத்தினர் அந்த வளைவை அகற்றியுள்ளனர். வளைவு அமைக்க பயன்படுத்தப்பட்ட பொருள்களையும் 

இராணுவத்தினர் அங்கிருந்து உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றி அனுப்பியுள்ளனர்.இந்தச் செயற்பாட்டை எவரும் ஒளிப்பதிவு செய்வதனைத் தடுக்கும் வகையில் அனைவரது அலைபேசிகளும் கைப்பற்றப்பட்டு மீள வழங்கப்பட்டதாக 

அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு