தமிழீழ மாவீரா்களுக்கான நினைவஞ்சலிக்காக உணா்வெழுச்சியுடன் தயாராகும் வடகிழக்கு மாகாணம்..!

ஆசிரியர் - Editor I
தமிழீழ மாவீரா்களுக்கான நினைவஞ்சலிக்காக உணா்வெழுச்சியுடன் தயாராகும் வடகிழக்கு மாகாணம்..!

தமிழீழ மாவீரா் நாள் நினைவேந்தல் நாளை வடகிழக்கு மாகாணங்களலும், புலம்பெயா் தேசங்க ளிலும் நினைவுகூரப்படவுள்ள நிலையில், வடகிழக்கில் மாவீரா் துயிலும் இல்லங்கள் உணா்வுபூா் வமாக தயாராகி வருகின்றது. 

2009 ஆம் ஆண்டு நடை­பெற்ற உள்­நாட்­டுப்­போரில் விடு­த­லைப்­பு­லிகள் மௌனிக்­கப்­பட்ட பின்னர் வடக்கு கிழக்கு மக்­க­ளினால் மாவீரர் தினம் உணர்­வு­பூர்­வ­மாக அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­ கின்­றது. அந்த வகையில் வடக்­கி­லுள்ள மாவீரர் துயிலும் இல்­லங்­களில் 

மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் நாளை 27 ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு பொதுச்­சுடர் ஏற்றி மாவீ­ரர்­களை நினை­வு­கூர மக்கள் தயா­ரா­கி­வ­ரு­கின்­றனர்.மாவீ­ரர்நாள் நினை­வேந்தல் குழு­வினர், பொது மக்கள் மற்றும் அர­சியல் கட்­சி­யினர் வடக்­கி­லுள்ள 

துயி­லு­மில்­லங்­களைப் பொறுப்­பேற்று சிர­ம­தா­னப்­ப­ணி­களை மேற் ­கொண்டு வரு­கின்­றன.குறிப்­ பாக யாழ்.மாவட்­டத்தில் கோப்பாய் மாவீரர் துயி­லு­மில்லம் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டி­லுள்­ள­மை­ யினால் அதற்கு முன்­பா­க­வுள்ள காணியை 

தமிழ்­தே­சிய மக்கள் முன்­ன­ணி­யினர் பொறுப்­பேற்று நினைவு தினத்­திற்­கான ஏற்­பா­டுகள் தயார்­ ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இதே­போன்று பூந­கரி, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்பு ஆகிய இடங்­க­ளி­லுள்­ள­ மா­வீரர் துயிலும் இல்­லங்­களை 

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பினர் மற்றும் பொது மக்கள் பொறுப்­பேற்று நிகழ்­வுக்­கான ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு