ஜனாதிபதியின் சிறப்பு வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்..! சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்காதோா் மீது சட்டம் பாயும்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியின் சிறப்பு வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்..! சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்காதோா் மீது சட்டம் பாயும்..

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் வழிகாட்டலில் யாழ்.மாநகா் பகுதியை துாய்மையாக்கும் சிறப்பு வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

பொலிஸாா், யாழ்.மாநகரசபை முதல்வா், உறுப்பினா்கள், ஊழியா்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளா்க ள் இணைந்து இந்த வேலை திட்டத்தை ஆரம்பித்துள்ளனா். 

இந்நிகழ்வு இன்று காலை 7.30 மணிக்கு யாழ்.முனியப்பா் ஆலய முன்னலில் ஆரம்பமானது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து கூறிய யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபா்,

யாழ்.மாநகரை துாய்மையாக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளோம். டெங்கு நுளம்புகள் பெருகாத வண் ணம் எமது சுற்றாடலை பாதுகாக்கவேண்டும். 

நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவாக சுற்றாடலை வைத்திருப்போா் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடு க்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு