ஐக்கியதேசிய கட்சியின் தலமை பதவியிலிருந்து விலகப்போகிறேன்..! ரணில் அதிரடி முடிபு..

ஆசிரியர் - Editor I
ஐக்கியதேசிய கட்சியின் தலமை பதவியிலிருந்து விலகப்போகிறேன்..! ரணில் அதிரடி முடிபு..

ஐக்கியதேசிய கட்சியின் தலமை பதவியில் தொடர்ந்தும் இருக்கமாட்டேன். என கூறியிருக்கும் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தைரியமாக முன்னெடுக்கவேண்டும் என கூறியதாக, 

அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்து கட்சியின் சகல தரப்புடனும் கலந்துரையாடி வெகு விரைவில் தீர்மானம் எடுப்பதாகவும் அவர் கூறினார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் தொடர்ந்தும் இருக்க ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்க்கவில்லை 

என்பதை அவர் தெளிவாக கூறியுள்ளார். அவர் குறித்து சிந்திக்க வேண்டாம் என்ற அறிவுரைகளை எமக்கு வழங்கியுள்ளார். எனினும் கட்சியாக பிளவுபடாது, முரண்பாடுகளை ஏற்படுத்தாத வகையில் எப்போதும் இணைத்து பயணிக்க தான் தயாராக 

இருப்பதாகவும் சுட்டிக்காட்டியதாகவும் அவர் இதன்போது கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு