அரசாங்க ஊழியா்கள் நியமனங்கள் அனைத்தையும் நிறுத்த அதிரடி உத்தரவு..! திறைசோி செயலாளா் கடிதம்..

ஆசிரியர் - Editor I
அரசாங்க ஊழியா்கள் நியமனங்கள் அனைத்தையும் நிறுத்த அதிரடி உத்தரவு..! திறைசோி செயலாளா் கடிதம்..

சகல அரச திணைக்களங்களிலும் உள்ள பணி வெற்றிடங்களுக்கான நியமனங்களை யும் உடன்டியாக நிறுத்துமாறு திறைசோியின் செயலாளா் சஜித் ஆட்டிக்கலாவால் உத்தரவிட்டிருக்கின்றாா். 

இது தொடர்பிலான அறிவித்தல், சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கும், 

அரசியலமைப்புப் பேரவைக்கும், DMC/Policy/Requeriments என்ற கடிதத்தின் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட அனைத்து நியமனங்களும், 

மீளவும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் வரை அவற்றை இடைநிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது என்றும், அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு