தமிழ் மொழியில் உள்ள பெயர் பலகைகள் அகற்றம்..! கடுப்பான பிரதமர் மஹிந்த பொலிஸாருக்கு அதிரடி உத்தரவு..!

ஆசிரியர் - Editor I
தமிழ் மொழியில் உள்ள பெயர் பலகைகள் அகற்றம்..! கடுப்பான பிரதமர் மஹிந்த பொலிஸாருக்கு அதிரடி உத்தரவு..!

கொழும்பில் சில பகுதிகளில் தமிழ் மொழியில் எழுதப்பட்ட வீதி பெயர் பலகைகளை இனவாதிகள் திட்டமிட்டு அகற்றும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவந்த நிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுங்கள். என பிரதமர் மஹிந்த ராஜபக்ச பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்.

பாணாந்துறை மற்றும் கெரவலப்பிட்டிய ஆகிய பகுதிகளில் உள்ள வீதிகளின் பெயர்ப்பலகையில் உள்ள தமிழ்மொழி இனந்தெரியாதோரால் கடந்த சில நாள்களில் அகற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியதுடன், ஆட்சி மாற்றத்தின் பின் சிறுபான்மை மக்களை

அச்சுறுத்தும் பேரினவாத சக்திகளின் ஆட்டம் ஆரம்பம் என்று சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வந்தனர்.இந்த நிலையில் வீதிகளின் பெயர்ப்பலகைகளில் உள்ள தமிழ்மொழியை அகற்றியவர்கள் தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பித்து அவர்களைக் கைது செய்யுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச, 

பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.பதில் பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று மாலை இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு