மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் நடந்த கொலைகள், கடத்தல்களை கண்டுபிடித்த அதிகாரி நாட்டைவிட்டு ஓட்டம்..!

ஆசிரியர் - Editor I
மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் நடந்த கொலைகள், கடத்தல்களை கண்டுபிடித்த அதிகாரி நாட்டைவிட்டு ஓட்டம்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற கொலைகள், கடத்தல்களை கண்டுபிடித்த குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டி சில்வா நாட்டைவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இலங்கை நேரப்படி இன்று பகல் 12.50க்கு தனது குடும்பத்தினருடன் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள், வெள்ளைவேன் கடத்தல், ஊடகவியலாளர்கள் படுகொலை போன்ற முக்கிய வழக்கு விசாரணைகளில் அதிரடி விசாரணைகளை செய்து பல இரகசியங்களை அம்பலப்படுத்தியவர் என்று நிஷாந்த டி சில்வா அறியப்படுகிறார். 

இதேவேளை குற்றப் புலனாய்வு பிரிவினர் பொறுப்பதிகரியாக இருந்த ஷானி அபேசேகர அண்மையில் இடம்மாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு