ஜனாதிபதி கோட்டபாய ஆட்சியில் தொடர்ந்து அகற்றப்படும் தமிழ்மொழி பெயர் பலகைகள்..! இனவெறி ஆட்டம் தொடர்கிறது..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி கோட்டபாய ஆட்சியில் தொடர்ந்து அகற்றப்படும் தமிழ்மொழி பெயர் பலகைகள்..! இனவெறி ஆட்டம் தொடர்கிறது..

ஜனாதிபதி கோட்டபாய ஆட்சியமைத்த பின்னர் கொழும்பில் தமிழ்மொழி பெயர் பலகை கள் இனவாதிகளால் தொடர்ந்தும் அகற்றப்படுக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாணந்துறையில் பெயர் பலகைகள் அகற்றப்பட்ட நிலையில்,

இந்த நிலையில் வத்தளையில் கெரவலப்பிட்டிய வீதியின் தமிழ் மொழிப் பலகை கழற்சி வீசப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாடுகளில் பேரினவாதக் கும்பல் ஒன்று ஈடுபடுவதாக சிறுபான்மை மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் வீதிப் பெயர்ப்பலகைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இடம்பெறவேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படும் நிலையில் சிறுபான்மை மக்களை அதிருப்தியடைய வைக்கும் வகையில் இந்தச் செயற்பாடு 

அமைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எனவே ஜனாதிபதி, பிரதமர் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தவேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு