இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபகசவை சந்திக்க விடுங்கள்..! போராட்டத்தில் குதித்த இந்திய மீனவா்கள்..

ஆசிரியர் - Editor I
இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபகசவை சந்திக்க விடுங்கள்..! போராட்டத்தில் குதித்த இந்திய மீனவா்கள்..

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக் சவை சந்திக்க அனுமதிக்குமாறுகோாி இந்தியா- இராமேஸ்வரம் மீனவா்கள் இன்று தொடக்கம் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனா். 

29ந் தேதி இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதியை இந்திய மீனவர்கள் சந்தித்து பேச மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்ததுள்ளனர். 

அனைத்து விசைபடகு மீனவ அமைப்புகள் இன்று ராமேஸ்வரம் மீன்பிடி தறைமுகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். 

கூட்டத்தில் இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக மீனவர்கள் மற்றும் படகுகள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடி சாதனங்களை 

சேதப்படுத்துவதை கண்டித்தும்,வரும் 29ஆம் தேதி இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமர் மீனவர் பிரச்சனை குறித்து பேசி நிரந்தர தீர்வுகானப் வேண்டியும், இலங்கையில் மீட்கப்படாத படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்கவும் நல்ல நிலையிலுள்ள படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கவும், கிடப்பில் போடப்பட்டுள்ள இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையை துவங்கி தீர்வு கானப்பட வேண்டும் 

அதேபோல் இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதியை தமிழக மீனவர்கள் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று முதல் காலவரம்மற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அனைத்து மீனவர் சங்க அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றினர். 

மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் 850க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரம் இடப்பட்டுள்ளது சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்களும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் முற்றிலும் வேலை இழப்பதோடு நாளொன்றுக்கு ரூ 4 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு