ஐக்கியதேசிய கட்சிக்குள் குடும்பி பிடிச் சண்டை..! மஹிந்தவின் நிகழ்வுகளில் ரணில், சஜித் அமைதி..

ஆசிரியர் - Editor I
ஐக்கியதேசிய கட்சிக்குள் குடும்பி பிடிச் சண்டை..! மஹிந்தவின் நிகழ்வுகளில் ரணில், சஜித் அமைதி..

இலங்கையின் எதிா்கட்சி தலைவா் பதவி யாருக்கு என்பது தொடா்பில் ஐக்கியதேசிய கட்சிக்குள் கடுமையான கருத்துமோதல் இடம்பெறுவதாகவும், கட்சி பிளவுபடும் அபா யம் எழுந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. 

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கட்சியின் பொதுசெயலாளர் அகில விராஜ் காரியவசம் சபாநாயகருக்கு கடிதம் சமர்ப்பித்திருக்கும் அதேநேரம், 

சஜித் பிரேமதாசவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்க கோரி மற்றுமொரு கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் இந்தவிடயம் தொடர்பாக தாம் நேற்று ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதாகவும், 

இன்று சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடவிருப்பதாகவும் முன்னாள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு