உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதிகளை கடுமையாக தண்டியுங்கள்..! பேராயர் ஐனாதிபதியிடம் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதிகளை கடுமையாக தண்டியுங்கள்..! பேராயர் ஐனாதிபதியிடம் கோரிக்கை..

பாரபட்சம் பார்க்காமல் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்குமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்‌ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையை ஜனாதிபதி கோட்டாபய பதவியேற்றுக் கொண்ட பின்னர் இன்று மாலை முதற்தடவையாக சந்தித்து ஆசிபெற்றார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகள் உரியவாறு இடம்பெற்றிருக்கவில்லை என்ற கவலையை கர்தினால் ஆண்டகை இதன்போது ஜனாதிபதியிடம் முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, சுயாதீன விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து உரிய விசாரணையை நடத்துவதாக உறுதியளித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு