மக்களே அவதானமாக இருங்கள்..! பொய்யான செய்திகளை நம்பவேண்டாம்.. ஜனாதிபதி கோாிக்கை..

ஆசிரியர் - Editor I
மக்களே அவதானமாக இருங்கள்..! பொய்யான செய்திகளை நம்பவேண்டாம்.. ஜனாதிபதி கோாிக்கை..

ஜனாதிபதியின் தீா்மானங்கள் என கூறி மிக பொய்யான செய்திகள் சமூக வலைத்த ளங்களில் உலாவரும் நிலையில் மக்கள் தெளிவாக இருக்குமாறு, ஜனாதிபதி கோட்ட பாய ராஜபக்ச கூறியிருக்கின்றாா். 

.இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதா வது. நான் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் முடிவுகள் எனக் கூறி பல தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

அனைத்து முடிவுகளும் ஜனாதிபதியின் அலுவலகம், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அல்லது எனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் மூலமாக மட்டுமே அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும் என்பதை நினைவில் கொள்க என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு