வடமாகாண புதிய ஆளுநா் முத்தையா முரளிதரன்..! வரதராஜா பெருமாள், தவராசா பெயா்களும் போட்டியில்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண புதிய ஆளுநா் முத்தையா முரளிதரன்..! வரதராஜா பெருமாள், தவராசா பெயா்களும் போட்டியில்..

இலங்கையின் 9 மாகாண ஆளுநா்களும் பதவி விலகியிருக்கும் நிலையில் வடமாகா ண புதிய ஆளுநருக்கு கிாிக்கெட் வீரா் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளதா க செய்திகள் வெளியாகியிருக்கின்றது. 

இன்று காலை ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றனர். புதிய ஆளுநர்கள் – தகவல்லலித் கமகே – மத்திய மாகாண ஆளுநராகவௌம் 

ராஜ கொல்லுரே – ஊவா மாகாண ஆளுநராகவும் வில்லி கமகே – தென்மாகாண ஆளுநராகவும் ஏ.ஜே.எம். முஸாமில் – வடமேல் மாகாண ஆளுநராகவும் டிக்கிரி கொப்பேகடுவ – சப்ரகமுவ மாகாண ஆளுநராகவும் 

சீதா அரம்பேபொல – மேல் மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரனை நியமிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது.

எனினும் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோரின் பெயர்களும் பரந்துரைக்கப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு