ரணில் விக்கிரமசிங்கவின் தலமையின் கீழ் செயற்பட தயாாில்லை..! தனி கட்சி ஆரம்பிப்பேன் சஜித் அதிரடி முடிவு..

ஆசிரியர் - Editor I
ரணில் விக்கிரமசிங்கவின் தலமையின் கீழ் செயற்பட தயாாில்லை..! தனி கட்சி ஆரம்பிப்பேன் சஜித் அதிரடி முடிவு..

ஐ.தே.கட்சியின் தலமை ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் செயற்படுவதற்கு தாம் உடன் படவில்லை. என சஜித் பிறேமதாஸ கூறியுள்ளதாக ஹரீன் பொ்னான்டோ கூறியிருக்கின்றாா். 

ஐக்கியதேசிய கட்சியின் தலைவராக சஜித்பிரேமதாசவை நியமிக்கவேண்டும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வேண்டுகோள் விடுத்து வருவதை தொடர்ந்து கட்சி பிளவுபடும் 

 அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.கட்சி தலைமையில் மாற்றம் ஏற்படாவிட்டால் புதிய கட்சியை உருவாக்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியின் தலைமை தலைமைத்துவத்தில் பாரியமாற்றங்கள் ஏற்படாவிட்டால் தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் அரசியலில் தொடர்ந்து நீடிக்கப்போவதில்லை என சஜித் பிரேதாச தெரிவித்துள்ளார் 

என ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.ரணில்விக்கிரமசிங்க தொடர்ந்தும் கட்சியின் தலைவராக நீடிப்பதற்கும் எதிர்கட்சி தலைவராக விளங்குவதற்கும் முயலக்கூடாது என ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ரணில்விக்கிரமசிங்க கட்சியின் தலைமைபொறுப்பிலிருந்து விலகி புதிய தலைவரிற்கு வழிவிடவேண்டும் இல்லையென்றால் புதிய கட்சியை ஆரம்பிக்கநேரிடலாம் எனவும் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு