பரபரப்பால் நிறையும் தெற்கு அரசியல்..! பிரதமராகிறாா் மஹிந்த, காபந்து அரசாங்கம் உருவாகிறது..

ஆசிரியர் - Editor I
பரபரப்பால் நிறையும் தெற்கு அரசியல்..! பிரதமராகிறாா் மஹிந்த, காபந்து அரசாங்கம் உருவாகிறது..

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, எதிா்கட்சி தலைவா் மஹிந்த ராஜபக்ச இன்று பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில், 15 போ் கொண்ட காபந்து அரசாங்கம் ஒன் று இன்றே அமைக்கப்படவிருக்கின்றது. 

புதிய பிர­தமர் நியமனம் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ தலை­மையில் நடைபெற­வுள்­ளது. இதன்­போது பிர­த­ம­ராக மஹிந்த ராஜ­பக்ஷ நிய­மிக்­கப்­ப­டு­வ­துடன் அதனைத் தொடர்ந்து எதிர்­வரும் மூன்று மாதங்­க­ளுக்கு 

இடைக்­கால அர­சாங்கம் ஒன்றை அமைப்­ப­தற்­காக 15 பேர் கொண்ட அமைச்­ச­ரவை ஒன்றும் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளது. ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய ராஜ­பக்ச பத­வி­யேற்றுக் கொண்ட பின்னர் பிர­தமர் நிய­மனம் தொடர்பில் ஆரா­யப்­பட்டு வந்­தது. 

இதன்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் மக்கள் ஐக்­கிய முன்னணியின் தலை­வ­ரு­ மான தினேஸ் குண­வர்த்­த­னவை பிர­த­ம­ராக நிய­மிக்­கலாம் என மஹிந்த ராஜ­பக்ஷ தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்­டது. 

எனினும் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வையே பிர­த­ம­ராக நிய­மிக்க வேண்டும் என்றும் அவரை பிர­த­ம­ராக நிய­மிப்­ப­தற்கே மக்­களின் ஆணை கிடைத்துள்­ள­தா­கவும் மஹிந்த தரப்பு எம்.பி.க்கள் வலி­யு­றுத்தி வந்தனர். 

இந்த நிலை­யி­லேயே இன்­றைய தினம் பிர­த­ம­ராக மஹிந்த ராஜ­பக்ஷ நிய­மிக்­கப்­ப­ட­ வி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.இதே­வேளை இன்­றைய தினமே எதிர்­வரும் மூன்று மாதங்­க­ளுக்­கான இடைக்­கால அர­சாங்­கத்­துக்­கான 

15 அமைச்­சர்­களும் நிய­மனம் பெறுவார்கள் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதில் குறிப்­பாக மஹிந்த தலை­மை­யி­லான கூட்­ட­ணியின் அங்கம் வகிக்கும் கட்­சி­களின் தலைவர்­க­ளுக்கு அமைச்சு பத­விகள் வழங்­கப்­படும் என்றும் தெரிவிக்கப்­ப­டு­கி­றது. 

அதே­போன்று ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவா­னந்தா, இ.தொ.க. தலைவர் ஆறு­ முகன் தொண்­டமான் ஆகி­யோ­ருக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் என தெரி­ விக்­கப்­ப­டு­கி­றது. புதிய ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய ராஜ­பக்ஷ 

நிய­மனம் பெற்­றதும் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தான் பிர­தமர் பத­வியை இரா­ஜி­ னாமா செய்­வ­தில்லை என்ற நிலைப்­பாட்டில் இருந்திருந்தார். எனினும் பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலின் பின்னர் 

இன்றைய தினம் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்திருக்கிறார். அதனடிப்படையிலேயே இன்றைய தினம் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பிற்பகல் 1.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றகவுள்ளதுடன் 

3.00 மணியளவில் பிரதமருக்கான தனது கடமைகளையும் பிரதமர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு