கடற்படை சுற்றிவளைப்பு..! 14.5 கிலோ ஆமை இறைச்சியுடன் இருவா் கைது..

ஆசிரியர் - Editor I
கடற்படை சுற்றிவளைப்பு..! 14.5 கிலோ ஆமை இறைச்சியுடன் இருவா் கைது..

மன்னாா் கடற்கரை பகுதிகளில் நடாத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவ டிக்கையின்போது 14.5 கிலோ ஆமை இறைச்சியுடன் இரு சந்தேகநபா்களை கடற்ப டையினா் கைது செய்திருக்கின்றனா். 

வட மத்திய கடற்படை கட்டளை சவுத்பார் கடற்கரையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு படகு கரைக்கு திரும்புவதைக் கண்டதுடன், இந்த கடல் ஆமை இறைச்சியை கண்டுபிடித்ததுள்ளது.

இதையடுத்து, சந்தேக நபர்கள் இருவரையும் அவர்களது மீன்பிடி படகுடன் கைது செய்தனர்.சந்தேகநபர்கள் இருவரும் மன்னாரில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்தோடு மீன்பிடிக் கப்பல் மற்றும் 

ஆமை இறைச்சி ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மன்னார் உதவி மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு