சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம்..! அப்பட்டமான பொய். அரச தரப்பு காட்டம்..

ஆசிரியர் - Editor I
சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம்..! அப்பட்டமான பொய். அரச தரப்பு காட்டம்..

இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படவேண்டும். என ஐனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷ உத்தரவிட்டதாக வெளியான செய்தி ஒரு வதந்தி என தெரியவந்துள்ளது.

சிங்கள மொழியில் மட்டுமே கீதம் இசைக்கப்பட வேண்டும் என ஐனாதிபதி உத்தரவிட்டதாக செய்நிகள் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியது. 

இந் நிலையில் அது பொய்யானசெய்தி என முன்னாள் அமைச்சர் மனோகணேசன் தமது சமூக வலைத்தளத்தில் எழுதியுள்ளார். 

தாம் அது குறித்து வாசுதேவ நாணயக்காரவுடன் பேசியதாகவும் அவ்வாறான உத்தரவை ஐனாதிபதி வழங்கவில்லை என அவர் கூறியதாகவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு