யாழ்.நகாிலுள்ள விடுதி ஒன்றில் 16 வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்..! உாிமையாளா், ஊழியா்கள் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகாிலுள்ள விடுதி ஒன்றில் 16 வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்..! உாிமையாளா், ஊழியா்கள் கைது..

யாழ்.நகாில் உள்ள விடுதி ஒன்றில் 16 வயது சிறுமி ஒருவா் மீது பாலியல் துஸ்பிரயோ கம் இடம்பெற்ற நிலையில் அதற்கு உதவிய விடுதி முகாமையாளா் மற்றும் உாிமை யாளரை பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் 16 வயதுடைய இளம் யுவதி பேருந்துக்காக நேற்றுமுன்தினம் காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞன் ஒருவர் 

அவருடன் காதல் வார்த்தைகள் பேசி யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் விடுதியிலேயே குறித்த இளம் யுவதியை விட்டுவிட்டு அந்த இளைஞன் அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட யுவதி யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் உள்ள மகளீர் பிரிவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டில் தன்னை ஆசை வார்த்தைகள் கூறி விடுதி ஒன்றுக்கு அழைத்து 

சென்ற இளைஞன் தம்மை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து இளம் யுவதி வழங்கிய தகவலுக்கு அமைய யாழ். நகரில் இயங்கி வரும் பிரபல விடுதியின் உரிமையாளரும் 

ங்கு பணியாற்றும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இளம் யுவதியை துஸ்பிரயோகம் செய்ய உதவி செய்த்தனர் என்ற குற்றச் சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.என்று பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு