சிங்கள மக்களைபோல் தெளிவான செய்தியை தமிழ் மக்களும் கூறியுள்ளனா்..! சஜித்திற்கு வாக்களிக்க காரணம் இதுதான்..

ஆசிரியர் - Editor I
சிங்கள மக்களைபோல் தெளிவான செய்தியை தமிழ் மக்களும் கூறியுள்ளனா்..! சஜித்திற்கு வாக்களிக்க காரணம் இதுதான்..

தமிழ் மக்கள் தங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றும் மனநிலை கொண்ட ஒருவருக் கு வாக்களித்துள்ளாா்கள். அது இனவாதமாகாது. என நாடாளுமன்ற உறுப்பினா் சி.சி றிதரன் கூறியிருக்கின்றாா். 

இன்று காலை அவருடைய இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு தமிழர்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்காமை 

இனரீதியான செயற்பாடு அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்து.தங்களுக்கான தலைவரை தெரிவு செய்யும் தேர்தலில் 

சிங்கள மக்கள் மிகத் தெளிவான முடிவை அறிவித்துள்ளனர்.அதேபோல தமிழ் மக்களும் தங்களது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக அறிவித்துள்ளனர். போரை வழிநடத்திய ஒருவர் ஜனாதிபதியாக வரக்கூடாது என்பதாலேயே 

அவரை தமிழ் மக்கள் ஏற்று வாக்களிக்கவில்லை.இதில் இனரீதியான செயற்பாடு இருக்கவில்லை. நாட்டின் ஜனாதிபதி சிங்களவர் என்பதற்கு அப்பால் எந்த ஜனாதிபதி தமிழர்களுக்கு தேவையானதை செய்வார் என்பதன் அடிப்படையிலேயே 

அவர்கள் வாக்களித்தனர் என மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு