துப்பாக்கிகள், வெடிபொருட்கள், இராணுவ சீருடைகள் மீட்பு..! புதையல் தோண்டியவா்கள் தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
துப்பாக்கிகள், வெடிபொருட்கள், இராணுவ சீருடைகள் மீட்பு..! புதையல் தோண்டியவா்கள் தப்பி ஓட்டம்..

புதையல் தோண்டியவா்களை சுற்றிவளைத்த பொலிஸாருக்கு வெடிபொருட்கள் மற் றும் இராணுவ சீருடை, துப்பாக்கிகள், காவி உடை ஆகியன சிக்கியுள்ளது. 

கலஹா லூல்­கந்­தூர தோட்டப் பிர­தே­சத்தில் புதையல் தோண்டுவதாக கிடைத்த இர கசிய தகவலையடுத்து பொலிஸாா் அந்த பகுதியை சுற்றிவளைத்தனா். 

எனினும் புதையல் தோண்டியவா்கள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் அங்­கி­ருந்து பெரு­ம­ளவு வெடி­பொ­ருட்கள், துப்­பாக்­கிகள், பௌத்த துற­விகள் அணியும் 

காவி உடை, இரா­ணுவ சீரு­டைகள் உட்­பட மேலும் பல பொருட்­களை கைப்­பற்­றி­யுள்­ ள­தாக கலஹா பொலிஸார் தெரி­வித்­தனர்.

பதின்­மூன்று கிலோ­கிராம் வெடி மருந்து, இரண்டு கைத்­துப்­பாக்­கிகள், எட்டு ஜெலட்டின் குச்­சிகள், இரா­ணுவ சீரு­டைகள் இரண்டு, இரா­ணுவ பாத­ணிகள், 

பௌத்த துற­வி­களின் காவி உடை ஒன்று, மின் பிறப்­பாக்கி, கேஸ் சிலிண்டர், கற்­ களை துளை­யிடும் உளிகள், அறுக்கும் கருவி, நான்கு அல­வாங்­குகள், 

வயர்கள், கேபல் கம்­பிகள், இரத்த கறைகள் படிந்த பூஜை பொருட்கள் உட்­பட மேலும் பல்­வேறு பொருட்­களை பொலிஸார் மீட்­டுள்­ளனர்.

நேற்று காலை பொலிஸ் அவ­சர சேவைப் பிரி­விற்கு கிடைக்கப் பெற்ற இர­க­சியத் தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் ஸ்தலத்­திற்கு விரைந்த கலஹா பொலிஸார் 

சந்­தேக நபர்­களை சுற்றி வளைத்து கைது செய்ய முற்­பட்ட சந்­தர்ப்­பத்தில் மேற்­கு­றிப்­ பிட்ட பொருட்­களை அவ்­வி­டத்­தி­லேயே விட்­டு­விட்டு சந்­தேக நபர்கள் 

ஆயு­தங்­க­ளுடன் தப்பிச் சென்­றி­ருப்­ப­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. லூல்­கந்­தூர தோட்ட கல்லு மலை பிர­தே­சத்தில் பாதை­யி­லி­ருந்து சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் 

அர­சுக்கு சொந்­த­மான வனப்­ப­கு­தியில் காணப்­படும் கல் அடுக்­குக்கள் பகு­தி­யி­லேயே புதையல் தோண்டும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அக்­கா­லத்தில் கண்டி இராஜ்­யத்தின் மீதான படை­யெ­டுப்­புக்­களின் போது அங்­கு­ரங்­ கெத்த பிர­தே­சத்­திற்கு ராஜாக்கள் தப்பிச் சென்­ற­தாகக் கூறப்­படும் வழியில் 

பெறு­ம­தி­யான பொருட்­களை மறைத்து வைத்­தி­ருக்க கூடும் என்ற நம்­பிக்­கையில் இதற்கு முன்­னரும் சுமார் மூன்று தட­வைகள் இவ்­வி­டத்தில் புதையல் 

தோண்டும் முயற்­சிகள் இடம் பெற்­ற­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.பொலி­ஸா­ரினால் கண்­டெ­டுக்­கப்­பட்ட இராணுவ சீருடையில் காணப்பட்ட இலக்கத்தினூடாக 

சந்தேக நபர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு