ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அதிரடி உத்தரவு..! தான் பயணிக்கும்போது வீதி தடைகளை போடவேண்டாம் என உத்தரவு..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அதிரடி உத்தரவு..! தான் பயணிக்கும்போது வீதி தடைகளை போடவேண்டாம் என உத்தரவு..

ஜனாதிபதி பயணிக்கும் வீதிகளில் தடைகளைபோட்டு மக்களுடைய இயல்பு வாழ்வு க்கு பாதிப்பை உண்டாக்கவேண்டாம். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தனது பாதுகாப்பு பிாிவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளாா். 

அத்துடன், தனது பயணங்களின் போது 3 வாகனங்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என்றும் ஜனாதிபதி பணித்துள்ளார்.அத்துடன்., ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் தற்போது ஆயிரத்து 200 பேர் பாதுகாப்புக்கு 

அமர்த்தப்பட்டுள்ள நிலையில் 200 பேராகக் குறைக்குமாறு கோத்தாபய ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பதவியேற்ற போது இவ்வாறே கட்டளைகளைப் பிறப்பித்திருந்தார். 

எனினும் அவரது உயிருக்கு ஆபத்து என எச்சரித்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு, சில மாதங்களிலேயே பாதுகாப்பை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு