இ.போ.ச பேருந்தில் கஞ்சா கடத்திய 23வயதான இளைஞன் கைது..!

ஆசிரியர் - Editor I
இ.போ.ச பேருந்தில் கஞ்சா கடத்திய 23வயதான இளைஞன் கைது..!

யாழ்ப்பாணம்- வவுனியா இடையில் 2 கிலோ 800 கிராம் கஞ்சாவை கடத்தி சென்ற 23 வயதான இளைஞனை போதைப்பொருள் தடுப்பு பிாிவு பொலிஸாா் கைது செய்தனா். 

அரச பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவரை வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் கடமையில் இருந்த பொலிசார் 

சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர். இதன்போது குறித்த நபரின் பயண பொதியில் இருந்து 2 கிலோ 800 கிராம் எடையுடைய கேரள கஞ்சாவினை 

பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவத்தில் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதுடன், 

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு