பதவியேற்று சில நிமிடங்களில் நாட்டின் முக்கிய துறைகளுக்கு செயலாளா்களை நியமித்த ஜனாதிபதி..!

ஆசிரியர் - Editor I
பதவியேற்று சில நிமிடங்களில் நாட்டின் முக்கிய துறைகளுக்கு செயலாளா்களை நியமித்த ஜனாதிபதி..!

ஜனாதிபதியாக தனது பதவியை இன்று உத்தியோகபூா்வமான பொறுப்பேற்றிருக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, நாட்டின் 4 முக்கிய துறைகளுக்கான செயலாளா்க ளை அதிரடியாக நியமித்திருக்கின்றாா். 

இந்நிலையில் இன்றைய தினம் காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார் இதையடுத்து உடனடியாக சில நியமனங்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் 

வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், திறைசேரியின் செயலாளராக முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் எஸ்.ஆர் ஆட்டிகல நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளராக பி.பீ ஜயசுந்தர 

நியமிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தின் தலைவராக ஓசத சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு